நாட்டு மருத்துவத்தில் மிக அவசியமான பொருட்களில் ஒன்றான பிரண்டை செடி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டு இருக்கிறது பிரண்டை செடியை என்னென்ன விதத்தில் பயன்படுத்தலாம் என்பதை தற்போது நாம் காணலாம்.
இளம் பிரண்டையை நெய் விட்டு, வதக்கி அடைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும் என்கிறார்கள். அடிபட்டு ஏற்படும் வீக்கத்தின் மேல் பிரண்டையை அரைத்து கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
பிரண்டை துவையல் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரண்டை தண்டை நெய் விட்டு வறுத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் பெருங்குடல் புண் குணமாகும்.
இந்தப் பிரண்டையை சாப்பிட்டு வருவதால் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை அதிகரிக்கும். பிரண்டை துவையல் செரிமான கோளாறு மலச்சிக்கல் உள்ளிட்டவற்றை நீக்குகிறது. பிரண்டை சாப்பிடுவது பெண்களுக்கு மாதவிடாய் கால வலியை குறைக்க உதவியாக இருக்கும் என்கிறார்கள்.