fbpx

தூள் அறிவிப்பு…! மனைப்பிரிவு வரன்முறை… 2024 பிப்ரவரி வரை கால அவகாசம் நீட்டிப்பு…! முழு விவரம்

மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில்; 20.10.2016 அன்று உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை வரன்முறைப்படுத்த பொதுமக்கள் மற்றும் மனைப்பிரிவிற்கும் மற்றும் மனை உரிமையாளர்களிடமிருந்து கோரிக்கை பெறப்பட்டுள்ளது. எனவே இணையவழி மூலம் மனை மற்றும் மனைப்பிரிவிற்கு வரன்முறைப்படுத்த 6 மாத காலம் அளித்து மேலும் ஒருமுறை வாய்ப்பு வழங்கலாம்.

தமிழக அரசானது, நகர் ஊரமைப்பு இயக்குநர் மற்றும் உறுப்பினர்-செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவிற்கும் வரன்முறைக்கோரி விண்ணப்பிக்க, தமிழ்நாடு ஒப்புதல் பெறாத மனைபிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைபடுத்தும் விதி 2017-இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மேலும், இத்திட்டத்தில் இணைய வழி மூலம் மட்டுமே மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க இயலும்‌. தமிழ்நாடு அங்கீகரிக்கப்படாத மனைபிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் விதி 2017-இல் இத்திட்டம் தொடர்பான உரிய திருத்தம் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குட் நியூஸ்...! தற்காலிக ஆசிரியா்களுக்கு 5 ஆண்டு பணி நீட்டிப்பு ஆணை...! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...!

Fri Sep 8 , 2023
தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 900 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 1,812 ஆசிரியா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணையில்; 2008-09, 2009-10 மற்றும் 2010-2011 ஆம் கல்வியாண்டுகளில் நிலையுயர்த்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளை பிரித்து துவக்கப்பட்ட அரசு […]

You May Like