fbpx

“இன்ஸ்டாகிராம் காதலின் லட்சணம்..”! 18 நபர்களால் கற்பழிக்கப்பட்ட ’16’ வயது மாணவி..!! அதிர்ச்சி சம்பவம்.!

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பள்ளி மாணவி 18 நபர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா அருகே உள்ள சிற்றார் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான வாலிபர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார்.

காதலர்கள் நெருங்கி பழகி வந்த நிலையில் நிர்வாண புகைப்படங்களை பரிமாறி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் காதலன் நிர்வாண புகைப்படங்களை காட்டி மிரட்டி பள்ளி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மாணவியின் நிர்வாண புகைப்படங்களை தனது நண்பர்களுக்கும் அனுப்பி இருக்கிறார்.

அதனை வைத்து மிரட்டி மேலும் சில நபர்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் சித்த பிரம்மை பிடித்தது போல் இருந்த மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்ட போது 18 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இதுவரை நான்கு மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!

Mon Feb 5 , 2024
முடித்து வைக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். ”இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி அனுமதியை பெறும் முன்பே தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளார். […]

You May Like