fbpx

இன்று தேசிய கைத்தறி தினம்…! டெல்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு…!

தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார். பகல் 12 மணிக்கு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.நாட்டின் வளமான கலை மற்றும் கைவினைக் கலை பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கைவினை கலைஞர்கள் மற்றும் ஆதரவை வழங்குவதில் பிரதமர் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.

இந்த தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் அரசு தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடத் தொடங்கியது. இந்த தினத்தின் முதல் கொண்டாட்டம் ஆகஸ்ட் 7, 2015 அன்று நடைபெற்றது. 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாகவும், உள்நாட்டு தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

மாணவர்களே இதை மிஸ் பண்ணாதீங்க..! இன்று ஆன்லைனில் தொடங்குகிறது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு…

Mon Aug 7 , 2023
இந்தியாவில் எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் ஆகியவற்றுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்திய தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) இதை நடத்துகிறது. நாடுமுழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்தஇடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை […]

You May Like