fbpx

16 சவரன் தங்கம்! 34,000 ரொக்க பணம்! காவலர் குடியிருப்பிலேயே கைவரிசையை காட்டிய எஸ்ஐ மகன் மற்றும் அவரது நண்பர் கைது!

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் அடுத்தடுத்து ஐந்து வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் தரைத்தளம் முதல் இரண்டாவது தளம் வரை ஐந்து வீடுகளில் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்று இருக்கின்றனர். இதனால் நேற்று காலை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் பொருட்களை திருட்டு கொடுத்த குடும்பத்தினர் புகார் செய்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட மேலும் ஒரு காவல்துறை புதுப்பேட்டை காவலர் குடியிருப்புக்கு வந்து விசாரணையை தொடங்கியது. காவல்துறையினர் அங்க பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வெளிநபர்கள் யாரும் காவலர் குடியிருப்புகள் வரவில்லை என்ற உண்மை தெரிந்ததுஇதனைத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான நபர்களை விசாரிக்க தொடங்கியது காவல்துறை. அப்போது எழும்பூர் ஆயுதப் படையில் உதவி ஆய்வாளராக இருக்கும் ஒருவரின் மகன் அன்ற அதிகாளையே வீட்டிலிருந்து வெளியே சென்றது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரின் மீது காவலர்களின் சந்தேக பார்வை திரும்பியது. இந்நிலையில் அந்த நபர் சிந்தாத்ரிப் பேட்டையில் உள்ள தனது நண்பருடன் இருந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் திருடியதை கொண்டனர். எழும்பூர் ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளரின் மகன் நந்தகோபால் மற்றும் அவரது நண்பர் அருண் ஆகியோர் இணைந்து இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்து கொண்டிருக்கும் நந்தகோபால் போதை புழக்கத்திற்கு அடிமையானவர் என விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தனது செலவிற்காக தனது நண்பருடன் சேர்ந்து இத்திருட்டியில் அவர் ஈடுபட்டுள்ளார். அவர்களிடமிருந்து 16 சவரன் தங்க நகைகள் 34,000 ரொக்க பணம் மற்றும் மூன்று செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

Baskar

Next Post

சென்னை மாதவரத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சடலம்! கடத்திவரப்பட்டு கொலை செய்யப்பட்டாரா திருநங்கை?

Fri Feb 24 , 2023
சென்னை மாதவரம் பகுதியில் திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை மாதவரத்தை அடுத்த 200 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கிறது. அதனை ஒட்டி இருக்கும் லேத் பட்டறை அருகில் கனரக வாகனங்களை நிறுத்துவது வழக்கம். அந்தப் பகுதியில் லாரியை நிறுத்தி இருந்த மணலியைச் சார்ந்த ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தை எடுப்பதற்காக சென்று இருக்கிறார். அப்போது அவரது லாரி அருகே […]

You May Like