fbpx

தேனி அருகே வீடு வாடகை எடுத்து நூதன முறையில் விபச்சாரம் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது!

தேனி மாவட்டத்தில் இருந்த கிராமம் ஒன்றில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்துவது போல் விபச்சாரம் செய்து வந்த கும்பலை தேனி மாவட்டம் போலீசார் கைது செய்திருக்கின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட அழகர்சாமிபுரம் என்ற கிராமத்தில் நூதனமான முறையில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஒரு வீட்டில் மட்டும் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை நோட்டமிட்ட போலீசார் அந்த வீட்டிற்குள் சென்று சோதனை இட்டபோது அங்க விபச்சாரம் நடந்து வருவது காவல்துறைக்கு தெரிய வந்தது. மேலும் இந்த தொழிலில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர் போலீஸ். இது தொடர்பாக தேனி அல்லிநகரம் பகுதியைச் சார்ந்த விஷ்ணு ராமமூர்த்தி சேது மூர்த்தி மற்றும் சபிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்கள் விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதற்காக வெளியூரை சார்ந்த பெண் ஒருவரையும் கடத்தி வந்து தொழிலில் ஈடுபடுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த கும்பல் இடமிருந்து பெண்ணை மீட்டு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. விபச்சாரம் தொடர்பாக ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தேனி பெரிய குளம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Baskar

Next Post

நண்பருடன் சேர்ந்து மனைவியை ஃபேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரித்த கணவர்!

Wed Feb 15 , 2023
தன் மனைவியின் புகைப்படத்தை நண்பருடன் சேர்ந்து முகநூலில் ஆபாசமாக பதிவிட்டு சித்தரித்து வந்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனைவி புகார் அளித்த சம்பவம் நாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கடைசல் ரோடு பகுதியைச் சார்ந்தவர் சபிதா பேகம். இவருக்கு நாகப்பட்டினம் அருகே உள்ள பெரராவச்சேரியை உமர் பாரூக் என்பவருடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்தின் போது வரதட்சணையாக 40 பவுன் நகை ரொக்கம் மற்றும் சீர்வரிசை […]

You May Like