தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சலுடன் பள்ளிக்கு சென்ற சிறுமி மூக்கிலிருந்து ரத்தம் வடிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி பகுதியைச் சார்ந்தவர் சுரேந்திரன். இவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜெபா ரோஸ்லின் ஏழு வயதான அந்தச் சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை காய்ச்சலுடன் பள்ளியில் இருந்த ஜெபா ரோஸ்லின் மறுபடியும் மூக்கிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறுமி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் ஜெபா ரோஸ்லின் பெற்றோரை அழைத்து குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .