fbpx

ரூ.58 கட்டணம்…! வரும் 25 முதல் 30-ம் தேதி வரை…! அரசு கல்லூரிகளில் எம்எட் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்…!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு எம்எட் (M.Ed.) சேர்வதற்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (எம்.எட்.,) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023– 2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் பதிவு செய்ய ஒவ்வொரு கல்லூரிக்கும், விண்ணப்பக் கட்டணம் ரூ.58 மற்றும் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2/. மொத்தம் ரூ.60/. (ரூபாய் .அறுபது மட்டும்) செலுத்தப்படவேண்டும். SC/SCA/ ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவுக்கட்டணம் ரூ.2/- (ரூபாய் இரண்டு மட்டும்) செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் The Director. Directorate of Collegiate Education, Chennai 15″ என்ற பெயரில் 25.09.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு 25ஆம் தேதி முதல் தொடங்கும். விண்ணப்பிக்க 30ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அருணாச்சல பிரதேச நில விவகாரம்!… இந்திய தடகள வீரர்களுக்கு விசா தர மறுப்பு!… சீன பயணத்தை ரத்து செய்தார் அனுராக் தாக்கூர்!

Sat Sep 23 , 2023
சீனாவில் நடக்கும், 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, அருணச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தடகள தடகள வீரர்களுக்கு விசா தர மறுத்த சீனாவின் செயலுக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின், ஹாங்ஸோ நகரில், 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று துவங்குகின்றன. நம் நாட்டின் சார்பில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு சீன அரசு விசா வழங்கி வருகிறது. இந்நிலையில், […]

You May Like