fbpx

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. அதிர்ச்சி தகவல்..

சீனாவில் இன்று நண்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. சிச்சுவான் தலைநகர் செங்டுவில் இருந்து தென்மேற்கே சுமார் 180 கிமீ (111 மைல்) தொலைவில் 16 கிலோமீட்டர் ஆழத்தில் லுடிங் நகரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சாங்ஷா மற்றும் சியான் போன்ற தொலைதூர பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது..

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, லூடிங்கிற்கு அருகிலுள்ள யான் நகரில் 4.2 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது என்று நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

2013 ஆம் ஆண்டில், யான் ஒரு வலுவான பூகம்பத்தால் தாக்கப்பட்டது, 100 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

”இப்படி இருந்தால் நாடு எப்படி வளரும்”..! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்..!

Mon Sep 5 , 2022
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால் நாடு வளராது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “நமது நாட்டில் 27 கோடி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். இதில், 18 கோடி மாணவர்கள் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். நாடு முழுவதுமே அரசுப் பள்ளிகள் இருக்கும் நிலையை நாம் அறிவோம். சில பள்ளிகளைத் தவிர பிற அரசுப் […]
”இப்படி இருந்தால் நாடு எப்படி வளரும்”..! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்..!

You May Like