fbpx

#அரியலூர்: கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற்று வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்..!

அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள ஆண்டிமடத்தை சேர்ந்த பெண் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் கன்னியாஸ்திரியாக இருந்துள்ளார்.திருச்சியில் அமைந்துள்ள கிறிஸ்தவ மடத்தில் தங்கி தனது இசை பயிற்சியை பெற்று வந்துள்ளார்

அந்த சமயத்தில் கல்லூரி முதல்வராக இருந்த பாதிரியார் ராஜரத்தினம் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கர்ப்பமானதை தெறித்து கொண்ட நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கருவை கலைத்துள்ளார். அத்துடன் 3 பாதிரியார்கள் தன்னை மிரட்டியதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

ராஜரத்தினம் மற்றும் மற்ற பாதிரியார்கள் 3 பேரும் சேர்ந்து இவரை மிரட்டியதாக புகார் அளித்துள்ளார். அத்துடன் கருக்கலைப்பு செய்த தனியார் மருத்துவமனை பெண் டாக்டர் உள்ளீட்ட 5 பேர் மீது காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் பாதிரியார் ராஜரத்தினம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மற்ற 3 பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஐகோர்ட்டு ரத்து செய்துவிட்டது. இதனையடுத்து தற்போது கன்னியாஸ்திரிக்கு கருக்கலைப்பு செய்த பெண் டாக்டர் மீதான வழக்கு குற்றச்சாட்டுக்கு மட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Baskar

Next Post

பள்ளி சீருடையில் போதையில் தள்ளாடும் அரசுப் பள்ளி மாணவன்..!! வைரல் வீடியோ உள்ளே..!!

Tue Dec 13 , 2022
அரசுப் பள்ளி மாணவர், பள்ளி சீருடையில் குடித்துவிட்டு தள்ளாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர், பள்ளி சீருடையில் மது அருந்தி விட்டு போதையில் சாலையில் தள்ளாடி விழுவதும், அந்த மாணவனை சக மாணவர் […]
பள்ளி சீருடையில் போதையில் தள்ளாடும் அரசுப் பள்ளி மாணவன்..!! வைரல் வீடியோ உள்ளே..!!

You May Like