fbpx

கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் காண வருகை தரும் பிரதமர்கள்….!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 3 ஒரு நாள் போட்டி உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடந்துவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கின்ற நரேந்திரமோடி மைதானத்தில் நாளை ஆரம்பம் ஆகிறது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இந்த மைதானத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் இருக்கைகள் உள்ளனர் முதலாளி ஆட்டத்தை காண ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் திரள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது..

பொதுவாக உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்கும்போது தான் பிரதமர்கள் குடியரசு தலைவர்கள் என்று அரசியல் முக்கிய புள்ளிகள் அந்த விளையாட்டை காண்பதற்கு வருகை தருவார்கள்.

ஆனால் முதல் முறையாக நாளை நடைபெறவிருக்கும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் காண்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் ,ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பானீசும் நேரில் வருகை தர இருக்கிறார்கள்.. இதன் காரணமாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. சுமார் 2000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக குஜராத் மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Next Post

நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான்….! முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு….!

Wed Mar 8 , 2023
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உலகத்தில் எல்லா நாளும் போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடும் இயக்கம் திராவிடர் முன்னேற்ற கழகம். மகளிர் தினம் மனித குலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள் மகளிர் தினம் மகளிரை வாழ்த்துவதன் மூலமாக இந்த நாட்டை நாம் வாழ்த்துகிறோம் என்று தெரிவித்திருக்கிறார். மன்னனையே கேள்வி எழுப்பும் துணிச்சல் […]

You May Like