fbpx

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்.. சொத்து, ஆவணங்கள் சரிபார்ப்பு…

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில், அவரது சொத்து, ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று நடைபெற்று வருகிறது..

கடந்த ஆண்டு டிசம்பவர் மாதம், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத 2.16 கோடி பணம், வங்கி லாக்கர் சாவிகள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்சஒழிப்புத்துறை தெரிவித்திருந்தனர்.. இந்த சோதனையில் பல வங்கிகளின் லாக்கர் சாவிகள், மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்குகள், ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது..

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில், கடந்த ஆண்டு சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள், ஆவணங்கள் பற்றி விசாரித்து அவற்றை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.. அவரது சொத்து ஆவணங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தங்கமணி வீட்டில் வருவாய், பொதுப்பணி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்..

Maha

Next Post

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மீதே மாணவர்களுக்கு ஆர்வம்..! 40 அரசுப் பள்ளிகள் மூடல்..! RTI அதிர்ச்சித் தகவல்.!

Wed Jul 20 , 2022
தமிழகத்தில் 40 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) இது தொடர்பாக வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், ”தனியார் பள்ளிகளின் மீதான ஆர்வம் அதிகரிப்பால் அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறியதாகவும், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறி தனியார் பள்ளிகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 669 தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரக்கூடிய […]

You May Like