fbpx

’இந்தியக் குடிமகனாக பெருமிதம்’..!! நடிகர் கமல்ஹாசன் குடியரசு தின வாழ்த்து..!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

நட்டின் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமைப்பாதையில் தேசிய கொடியை ஏற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்கிறார். இதேபோல், இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜா் சாலையில் உழைப்பாளா் சிலை பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநா் ஆா்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இதற்கிடையே, குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். அதில், ”மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் எனும் மகத்தான மக்களாட்சித் தத்துவத்தை உலகுக்கு அறிவிப்பதில் முன்னோடியாகத் திகழும் இந்தியா, குடியரசுத் தன்மையின் 75-ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறது. இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

குரூப் 2ஏ தேர்வுக்கான மதிப்பெண், தரவரிசைப் பட்டியல்..!! எப்போது வெளியீடு..!! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!!

Fri Jan 26 , 2024
குரூப் 2ஏ தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்-2, குருப்-2ஏ மெயின் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் ஜனவரி 11ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்நிலையில், குருப்-2 பிரிவின் கீழ் வரும் நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே […]

You May Like