தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை சங்கீதா. இவர், ஒரு சில படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் கபடி கபடி படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக பிதாமகன் படத்தில் நடித்தது தான், இவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தந்தது. வெற்றிலை பாக்கு வாயில் கெட்ட வார்த்தைகள் பேசும் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இவர், பிரபல பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. சங்கீதா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் தனது நண்பர்கள், நெருங்கிய வட்டாரங்கள் என சிலரை அழைத்து பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதில், நடிகை சுஜா வருணி மற்றும் அவரது கணவரும், நடிகருமான ஷ்யாம் மற்றும் அவரது மனைவியுடன் குறிப்பிட்ட சில பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சர்ச்சையாகி வருகிறது. சுஜா வருணியின் கணவர் சங்கீதா கன்னத்தில் முத்தமிடுவதும், சுஜா வருணி கிரிஷுக்கு முத்தம் கொடுப்பதும் போன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது என்ன கண்றாவின்னு என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரவர் விருப்பப்படி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இப்படி இருந்தால் சமூகம் எதை நோக்கி செல்லும்? விருந்து வைப்பது பரவாயில்லை. இப்படி போட்டோக்களை பதிவிடுவதன் மூலம் பார்ப்பவர்களே தங்கள் இஷ்டத்துக்கு கதை எழுதுவார்கள் என்று ஒரு சிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.