fbpx

முன்னாள் முதல்வர் உயிரிழப்பு…! அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…! அரசு உத்தரவு…!

உடல் நலக்குறைவு காரணமாக காலமான பஞ்ச முன்னாள் முதலமைச்சரின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற உள்ள நிலையில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

5 முறை பஞ்சாப் முதல்வராகவும், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 95 வயதான அவர் மூச்சுக்குழாய் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கடந்த வாரம் மொஹாலியின் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஃபோர்டிஸ் மருத்துவமனையின் அறிக்கை ஒன்றில், பிரகாஷ் சிங் பாதல் மூச்சுக்குழாய் ஆஸ்துமாவின் தீவிர அதிகரிப்புடன் ஏப்ரல் 16 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 18 ஆம் தேதி அவரது சுவாச நிலை மோசமடைந்ததால் மருத்துவ ஐசியூவிற்கு மாற்றப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி 25-ம் தேதி இரவு உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசும் 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டது. இன்று இறுதி ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கி பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

வந்தது அதிரடி உத்தரவு...! வெடி மருந்து பயன்படுத்தி மீன்‌ பிடித்தால்‌ கடும்‌ நடவடிக்கை...!

Thu Apr 27 , 2023
சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள நீர்நிலைகளில்‌ வெடி மருந்துகளைப்‌ பயன்படுத்தி மீன்‌ பிடித்தால்‌ கடும்‌ நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டம்‌, மேட்டூர்‌ அணைப்‌ பகுதியில்‌ மீன்வளத்துறையின்‌ மூலம்‌ மீனவர்களுக்கு மீன்படி உரிமம்‌ வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீன்படி உரிமம்‌ பெற்றவர்கள்‌ அனுமதிக்கப்பட்ட இடங்கள்‌ மற்றும்‌ அனுமதிக்கப்பட்ட நேரங்களில்‌ மீன்‌ பிடித்து வருகின்றனர்‌. அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைப்‌ பின்பற்றாத மீனவர்கள்‌ மீது நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு, […]

You May Like