தமிழக பள்ளிகளில் தற்போது 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 27ம் தேதி காலாண்டு தேர்வு முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை, 5 நாட்கள் காலாண்டு விடுமுறை முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை நாட்களை அதிகரித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது, அதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அக்டோபர் 9ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி அக்டோபர் 3ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.