fbpx

தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்கிறதா..? தீயாய் பரவும் தகவல்..!! உண்மை இதுதான்..!!

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை அரசு உயர்த்த உள்ளதாக பரவும் தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. பழைய குறைந்தபட்ச கட்டணம் 170 ரூபாயாக இருந்த நிலையில், புதிய கட்டணமாக 55 ரூபாய் உயர்த்தப்பட்டு 225 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கட்டண உயர்வு தொடர்பான பதிவுகளை மறுபதிவு செய்து தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனால் பயனாளர்களிடையே பெரும் குழப்பம் நிலவி வந்தது. இந்த தகவல்களை தற்போது தமிழ்நாடு அரசு, மின்வாரியம் ஆகியவை மறுத்துள்ளன. இது தொடர்பாக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ’ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தி என தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஜூலையில் வெளியான செய்தி தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. யாரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளது.

Read More : ரூ.1,000 உரிமைத்தொகை..!! இனி இவர்களுக்கும் கிடைக்கப்போகுது..!! தேதி குறிச்சாச்சு..!! ரேஷன் அட்டையும் ரெடி..!!

English Summary

An explanation has been given regarding the spread of information that the government is going to increase the electricity tariff in Tamil Nadu.

Chella

Next Post

அதிர வைக்கும் சாலிகிராமம் அப்பார்ட்மெண்ட் சம்பவம்..!! 15 வயது சிறுமியை இரவு முழுவதும்..!! சிக்கிய பெண் ஆடை வடிவமைப்பாளர்..!!

Tue Jun 11 , 2024
A female film costume designer in Chennai has been arrested in the POCSO case. What happened..? How did he get caught in the police..? This news package describes the...

You May Like