fbpx

கதவை திறக்காததால் ஆத்திரம்..!! தாயின் படுக்கையறைக்கு சென்று மகன் செய்த காரியம்..!! அதிர்ச்சி

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே ஜூகு பகுதியைச் சேர்ந்தவர் வீணா கபூர் (74). இவரது மகன் சச்சின் (43). தாய்-மகன் இருவருக்கும் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. அவர்கள் கரிப் தாஸ் சொசைட்டி குடியிருப்பில் தனித்தனி அறைகளில் வசித்து வந்தனர். டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில் தனது தாய் இருக்கும் வீட்டுக்கு காலிங் பெல்லை அழுத்தியுள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த சச்சின் கதவைத் திறந்தவுடன் உள்ளே சென்று தாயுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதில், பெற்ற தாயை பேஸ்பால் பேட்டை வைத்து ஓங்கி பலமுறை அடித்துள்ளார். இதில், வீணா கபூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சச்சின் தாயைத் தாக்கும் காட்சி அவரது படுக்கையறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பின்னர் தாயின் உடலை மும்பைக்கு அருகே ரகசியமாக புதைக்க ஆன்லைனில் இடம் தேடியுள்ளார். பின்னர் தாயின் உடலை மூட்டையாகக் கட்டி 30 அடி பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு வந்திருக்கிறார். சச்சினின் வீட்டில் வேலை பார்க்கும் லாலுகுமார் மண்டல் என்பவர் சச்சினுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார். வீணாவின் படுக்கையறையில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றவும், கொலைக்குப் பிறகு உள்ள அறையைச் சுத்தம் செய்து, உடலையும் பள்ளத்தாக்கில் வீசுவதற்கும் உதவி இருக்கிறார். அமெரிக்காவில் பணிபுரியும் வீணாவின் மூத்த மகன் நெவின் மூலம் இந்தக் கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வழக்கமாக தினமும் தனது தாயுடன் போனில் பேசும் நெவின் டிசம்பர் 6ஆம் தேதி மாலை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது எடுக்கவில்லை. பின்னர் தாயார் வசிக்கும் குடியிருப்பின் செக்யூரிட்டியிடம் தெரிவித்து தன் தாயைத் தொடர்புகொள்ள உதவி கோரி இருக்கிறார். செக்யூரிட்டியும் போனில் வீணாவை தொடர்புகொள்ள முடியாததால் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினர் கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது, வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீணாவின் படுக்கை அறையில் அவரது இரண்டு மொபைல் போன்களைக் கைப்பற்றினர். விசாரணையில், 41 பேர் இந்தக் கொலை தொடர்பாக வாக்குமூலங்கள் அளித்துள்ளனர். அவற்றுடன் தடயவியல் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், ரத்தக்கறை படிந்த பேஸ்பால் பேட், வீணாவின் மூத்த மகன் நெவின் வாக்குமூலம், சுங்கச்சாவடி ஊழியர்களின் வாக்குமூலம் ஆகியவை முக்கிய சாட்சியங்களாக உள்ளன. சச்சின் தாயின் உடலை மூட்டை கட்டி காரில் எடுத்துச் செல்லும் காட்சியும் திரும்பி வரும்போது மூட்டை இல்லாமல் காலியாக வரும் காட்சியும் டோல்கேட் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தனது தாய் தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சி செய்தார் என்றும் இரவு நேரத்தில் நான் வீட்டுக்கு வருவதைத் தவிர்க்க விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, காலிங் பெல்லையும் அணைத்து வைத்துவிடுவார் என்றும் சச்சின் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் சச்சின் மற்றும் அவருக்கு உதவிய மண்டல் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Chella

Next Post

’நீ இருந்தாலே ஒரே தொல்லை தான்’..!! காட்டுக்குள் பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலம்..!! விசாரணையில் அதிர்ச்சி..!!

Sat Feb 25 , 2023
திருவண்ணாமலை மாவட்டம் பேகோபுரம் 5-வது தெருவில் வசித்து வந்தவர் விஜயா (65). இவர் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது வீட்டில் கணவனை இழந்த காஞ்சனா என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஞானவேலு (38) என்பவருடன் காஞ்சனாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக காஞ்சனா, சரியான முறையில் வாடகை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், வீட்டின் உரிமையாளர் விஜயா, வாடகை […]

You May Like