fbpx

தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல்‌ 28-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்‌.

Vignesh

Next Post

டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளார் சைலேந்திரபாபு?... வெளியான தகவல்!

Sun Jun 25 , 2023
டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இரண்டு முக்கிய பொறுப்புகளில் உள்ள தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் ஓய்வு பெற உள்ள நிலையில், யார் அந்த பொறுப்பை வகிக்க போகிறார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. தமிழகத்தின் காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு வரும் 30 ஆம் […]

You May Like