fbpx

இன்று கனமழை பெய்யும்.. வரும் 12-ம் தேதி வரை மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி வரை மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது…

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை, குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுஇகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை, ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், கர்நாடகா கடலோரப் பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. எனவே இந்த நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

பத்தாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம், சக மாணவர்கள் செய்த அட்டூழியம்...!

Fri Jul 8 , 2022
கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்‌ மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வில் தோல்வியடைந்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தன்னுடன் படைத்த மாணவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, அவரது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் […]
’தினமும் 10 பெண்களிடம் இதை செய்வேன்’..!! ’இது இல்லாம என்னால இருக்க முடியாது’..!! பகீர் வாக்குமூலம்..!!

You May Like