fbpx

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய அரசு பள்ளி முதல்வர் அதிரடி கைது…..!

ராஜஸ்தான் மாநிலம் துன்கார்பூர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ் சந்திரன். இவர் மீது அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் 6 பேர் கடந்த மே மாதம் 31ம் தேதி பாலியல் புகார் வழங்கினர்.

அங்கே தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விடுமுறை தினங்களில் கூட சில மாணவிகளை தலைமை ஆசிரியர் ரமேஷ் பள்ளிக்கு அழைத்திருக்கிறார். தோட்ட வேலை செய்யுங்கள் படிப்பை அதற்கு மற்ற திறன் சார்ந்த வேலைகளில் ஈடுபடுங்கள் என தெரிவித்து மாணவியர்களை ரமேஷ் வரவழைத்துள்ளார். அப்போது மாணவிகள் தனியாக இருந்த நேரம் பார்த்து அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

அதோடு தன்னுடைய புதிய வீட்டிற்கு அழைத்துச் சென்று மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அதிர்ச்சி தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது, பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களுடைய பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை தெரிவித்து இருந்த நிலையில், காவல்துறையிடம் கூட்டாக அவர்கள் புகார் வழங்கியுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், மாவட்ட ஆட்சியர் இடமும் புகார் மனு வழங்கி சரியான தண்டனை வாங்கி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் அதன் அடிப்படையில் மாணவிகளின் வாக்குமூலம் பெறப்பட்டு அதன் பிறகு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவுகள் வந்த நிலையில் புகார் ஆளான பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவரை சென்ற சனிக்கிழமை கைது செய்த காவல்துறை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. மேலும் அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நேர்ந்த இத்தகைய கொடுமையான சம்பவம் ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் வெட்கக்கேடு என்று எதிர்க்கட்சியான பாஜக ஆளும் தரப்பை கடுமையாக சாடியிருக்கிறது.

Next Post

சிகிச்சைக்கு வந்த பெண்ணுடன்…..! உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டிய மருத்துவர் மீது பாய்ந்த வழக்கு…..!

Mon Jun 5 , 2023
சென்னை எண்ணுறைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் பட்டதாரி ஒருவருக்கு கடந்த 2019 ஆம் வருடம் தண்டையார்பேட்டை பகுதியில் இருந்த ஒரு மருத்துவரிடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது இளம் பெண்ணுக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. அதன் பிறகு இருவரும் வாட்ஸப் மூலமாக சேட்டிங் லாங் டிரைவ் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக […]

You May Like