fbpx

“மிக்ஜாம்” புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்துள்ளார். அவருடன் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வலத்துறை இணையமைச்சர் எல் முருகனும் உடன் வந்துள்ளார். இருவரும் மழை வெள்ளம் மற்றும் புயலால் ஏற்பட்ட சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

மத்திய அமைச்சர்களுடன் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசும் வெள்ள சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய இருக்கிறார் . பின்னர், மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைத் தலைமைச்செயலகத்தில் சந்தித்து மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ளச் சேதங்கள் பற்றி கேட்டறிய உள்ளனர்.

Vignesh

Next Post

மோடியை பழிவாங்க டிச.13ல் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படும்!… தீவிரவாதி மிரட்டல்!… பலத்த பாதுகாப்பு!

Thu Dec 7 , 2023
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமை பெற்றவர் குர்பத்வந்த் சிங் பன்னு. காலிஸ்தான் தீவிரவாதியும் தடை செய்யப்பட்ட ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்பின்தலைவருமான இவர் மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில் நரேந்திர மோடி அரசு தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும் இதற்கு டிசம்பர் 13-ம் தேதி பதிலடி கொடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற […]

You May Like