தீபாவளி முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கம். அதே போல தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த நிலையில் இம்மாதம் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நாளில் வரவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளுக்கு, 100 சதவீத பொருட்களையும், ஒரே தவணையில் அனுப்ப வேண்டும் என தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டது மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் ரேஷன் கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.