fbpx

கிருஷ்ணகிரி அருகே…..! கொடுத்த கடனை வசூலிக்கச்சென்ற நபர் ஓட ஓட வெட்டிப்படுகொலை…..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாந்தி நகரைச்சேந்தவர் கேசவன்(45) இவர், செங்கல் சூளை, ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். இந்த நிலையில் தளி அருகே இருக்கின்ற என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் இவரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது அதனை வசூலிக்க இருசக்கர வாகனத்தில் கேசவன் சென்று கொண்டிருந்தார்.

இவர் கே.மல்லச்சந்திரம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்த சமயத்தில் கேசவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது காரில் வந்த கும்பல் மோதியது இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கி 8 பேர் கொண்ட கும்பலை பார்த்து கேசவன் உயிர் பயத்தில் ஓடத் தொடங்கினார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட வெட்டி கொலை செய்தது பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கேசவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கப்பதிவு செய்த அவர்கள் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

தந்தையுடன் முன்விரோதம்..!! மகனை வெட்டிக்கொன்ற தாயின் கள்ளக்காதலன்..!! தூத்துக்குடியில் பகீர் சம்பவம்..!!

Tue Jun 20 , 2023
தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை விட்டு பிரிந்து, பெயிண்டர் சுடலைமணி என்பவருடன் வசித்து வருகிறார். ஆவுடையப்பன் தனது மகன் கணேசனுடன் (24) தனியாக வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்றது தொடர்பாக ஆவுடையப்பன் மற்றும் சுடலைமணி இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு டி.எம்.பி. காலனி பகுதியில் ஆவுடையப்பனின் மகன் […]
தந்தையுடன் முன்விரோதம்..!! மகனை வெட்டிக்கொன்ற தாயின் கள்ளக்காதலன்..!! தூத்துக்குடியில் பகீர் சம்பவம்..!!

You May Like