fbpx

முகத்தை பளபளப்பாக மாற்றும் ’செம்பருத்தி கிரீம்’..!! அதிக செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்கலாம்..!!

முகத்தை ஜொலிக்க வைக்கும் செம்பருத்தி க்ரீமை எப்படி தயார் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முகம் கருப்பாக இருப்பதை பல பெண்கள் விரும்ப மாட்டார்கள். இதனால் முகத்தை வெள்ளையாக்க பல க்ரீம்களை முகத்திற்கு பூசிக் கொள்கின்றனர். இதனால் முகம் வெள்ளையாகுமா? என்றால் நிச்சயம் கிடையாது. நிறத்தை மாற்றுவது சற்று கடினம் தான். ஆனால், இயற்கை முறையில் சரும நிறத்தை குறைந்த செலவில் மாற்ற முடியும்.

தேவையான பொருட்கள்

செம்பருத்தி பூ

கற்றாழை

அரிசி மாவு

ரோஸ் வாட்டர்

தேங்காய் எண்ணெய்

செய்முறை :

* 10 செம்பருத்தி பூவை 2 கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.

* ஒரு கற்றாழையை எடுத்து தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்துக் கொள்ளவும்.

* பிறகு ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

* அதில், கற்றாழை ஜெல் மற்றும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

* பிறகு தயார் செய்து வைத்துள்ள செம்பருத்தி தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்து தினமும் முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவாகும்.

Chella

Next Post

BREAKING NEWS | 'CSK' ரசிகர் தூக்கு போட்டு தற்கொலை.! காவல்துறை தீவிர விசாரணை.!

Thu Jan 18 , 2024
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தோனியின் தீவிர ரசிகரான கோபி கிருஷ்ணன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த அரங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் போரக்ஸ் ட்ரேடராக துபாயில் பணியாற்றி வந்தார். CSK மற்றும் எம்.எஸ் தோனியை சிறப்பிக்கும் வகையில் தனது வீடு முழுவதும் மஞ்சள் வண்ணத்தால் […]

You May Like