fbpx

மருத்துவமனயில் மேற்கூரை இடிந்து விழுந்தது விபத்து…! காப்பீட்டுக் கழகம் விளக்கம்…!

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பாக அனுப்பி உள்ள செய்திக் குறிப்பில் சென்னையில் 8-ம் தேதி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட உள் நோயாளிகள் வளாகத்தின் மூன்றாவது தளத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த பிரிவில் நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை, அந்த வளாகத்தில் எதிர் திசையில் அமைந்துள்ள அறையில் ஆறு நோயாளிகள் இருந்தனர். விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் எந்த நோயாளிக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஒரு நோயாளிக்கும் மட்டும் காலில் சிறு காயம் ஏற்பட்டது.

இந்த விபத்துக்கு மேற்கூரை பூச்சில் ஏற்பட்ட விரிசலே காரணம். ஆனால் இது சம்பந்தமாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் வெளிவந்துள்ள படங்கள் மற்றும் காணொலி காட்சிகள் தவறாக வழிநடத்தும் விதமாக அமைந்துள்ளது. மருத்துவக் கல்லூரியின் தலைவர் விரைந்து செயல்பட்டு அந்த வளாகத்தில் உள்ள நோயாளிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களை வேறு இடத்திற்கு பத்திரமாக அனுப்பிவைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

’எதிரே வந்தால் அரிவாள் வெட்டு’..!! ’பட்டாக்கத்தியுடன் உலா வந்த ரவுடிகள்’..!! நள்ளிரவில் பயங்கரம்..!!

Tue Oct 11 , 2022
ஆலந்தூரில் பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் வாகனங்களை தாக்கியும், பொதுமக்களை வெட்டியதாலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சென்னையின் முக்கிய பகுதியான ஆலந்தூரில் நேற்று நள்ளிரவில் திடீரென இருபதுக்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் ஒன்று சாலைகளில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்துள்ளன. அப்போது, அந்த ரவுடி கும்பல் சாலைகளில் நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அவர்கள் பட்டாக்கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த […]

You May Like