பதிவாளர்கள் தங்கள் அலுவலக எல்லைக்குள் உள்ள அனைத்து கிராமங்களின் விபரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களில், ஒவ்வொரு பதிவாளர் அலுவலக எல்லையும், தாலுகா எல்லையும் வேறுபட்டு இருப்பதால், தாலுகா எல்லைக்கு ஏற்றவாறு சார் – பதிவாளர் அலுவலக எல்லைக்குள், அனைத்து கிராமங்களும் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை எடுத்து வருகிறது. இதற்காக சார் – பதிவாளர் அலுவலக வாரியாக பட்டியல்கள் பெறப்பட்டு அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பதிவுத்துறை சார்பில் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; சார் – பதிவாளர்கள் தங்கள் அலுவலக எல்லைக்குள் உள்ள அனைத்து கிராமங்களின் விபரங்கள், தாலுகா வரைபட விபரங்கள், தாலுகா வரைபட விபரங்களுடன் ஒத்துப்போகிறதா…? என்று சரிபார்க்க வேண்டும். இந்த விபரங்களை, சரிபார்த்து, தலைமை அலுவலகத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.