fbpx

தமிழகமே…! பதிவாளர்கள் இந்த விபரங்கள் உடனே அனுப்ப வேண்டும்…! பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!

பதிவாளர்கள் தங்கள் அலுவலக எல்லைக்குள் உள்ள அனைத்து கிராமங்களின் விபரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களில், ஒவ்வொரு பதிவாளர் அலுவலக எல்லையும், தாலுகா எல்லையும் வேறுபட்டு இருப்பதால், தாலுகா எல்லைக்கு ஏற்றவாறு சார் – பதிவாளர் அலுவலக எல்லைக்குள், அனைத்து கிராமங்களும் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை எடுத்து வருகிறது. இதற்காக சார் – பதிவாளர் அலுவலக வாரியாக பட்டியல்கள் பெறப்பட்டு அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பதிவுத்துறை சார்பில் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; சார் – பதிவாளர்கள் தங்கள் அலுவலக எல்லைக்குள் உள்ள அனைத்து கிராமங்களின் விபரங்கள், தாலுகா வரைபட விபரங்கள், தாலுகா வரைபட விபரங்களுடன் ஒத்துப்போகிறதா…? என்று சரிபார்க்க வேண்டும். இந்த விபரங்களை, சரிபார்த்து, தலைமை அலுவலகத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்...! பண்டிகை கால சிறப்பு போனஸ் ரூ.4,000 அறிவிப்பு...!

Fri Aug 18 , 2023
அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகைக்கான போனஸ் ரூ.4,000 வழங்கப்படும் என நிதியமைச்சர் கே.என். பாலகோபால் தெரிவித்தார். போனஸ் பெற தகுதியில்லாத பணியாளர்கள் சிறப்பு விழா உதவித்தொகையாக ரூ.2,750 பெற தகுதியுடையவர்கள் என தெரிவித்தார். போனஸ் மற்றும் திருவிழா கொடுப்பனவு கடந்த ஆண்டு போலவே உள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேவை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு விழா உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் […]

You May Like