fbpx

அசத்தல்…! போட்டி தேர்வுக்கு தயாராகும் அவர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை…! முழு விவரம் உள்ளே…

இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் பசுமை வழிச்சாலையில் “காஞ்சி” வளாகத்தில் இயங்கி வருகிறது. ஆர்வலர்கள் தங்குவதற்கு அறைகளும், கட்டணமின்றி உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. 25,000 நூல்கள் கொண்ட நூலகம் ஒன்றும் இப்பயிற்சி மையத்தில் அமைந்துள்ளது. செப்டம்பர் 2022-இல் மத்திய தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணிகள் முதன்மைத் தேர்வின் இறுதி முடிவு 06.12.2022 அன்று வெளியிடப்பட்டது.

’தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சூழலில் இனியும் ’தண்டோரா’ போடக்கூடாது’..! தலைமைச் செயலாளர் உத்தரவு

இப்பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்ற 19 தேர்வர்களும், 23.12.2022 அன்று வெளியிடப்பட்ட வனப்பணி முதன்மைத் தேர்வு முடிவுகளில், இப்பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்ற 9 தேர்வர்களில் 5 தேர்வர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் புது டெல்லியில் ஆளுமைத் தேர்வை சந்திக்க உள்ளனர். இம்மையத்தில் பயின்று வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமல்லாமல், முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து தேர்வர்களுக்கும், மாதிரி ஆளுமைத் தேர்வை இம்மையம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

தேர்வர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு மிகப் பெரிய பயிற்சியாக அமைவதோடு, தங்களது செயல்பாட்டை மேலும் எவ்வாறு மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற தெளிவையும் தருகிறது. அதனால் பல தேர்வர்கள் இதில் கலந்துகொண்டு அனுபவங்களையும், அறிவுரைகளையும் பெற்று பயன் அடைந்திருக்கின்றனர். இம்முறையும் 02.01.2023 திங்கட்கிழமை, 03.01.2023 செவ்வாய்கிழமை ஆகிய இரு நாட்களில் நடத்தப்பட்ட மாதிரி ஆளுமைத் தேர்வில், 46 குடிமைப்பணித் (IAS & IPS) தேர்வர்களும், 8 வனப்பணித் (IFS) தேர்வர்களும் கலந்துகொண்டனர். இதில், 25 மகளிரும், 2 பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளும் உட்படுவர்.

கல்லூரிகளில் சேர வரும் 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..! உயர்கல்வித்துறை அறிவிப்பு

முதல் நாள் காலை மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு முன்னர் ஆளுமைத் தேர்வு குறித்தும், அதில் தேவைப்படுகிற திறன்கள் குறித்தும் தேர்வர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டதுடன், அவர்களின் சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்பட்டது. மாதிரி ஆளுமைத் தேர்வினை நடத்த ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் ஓய்வுபெற்ற / பணியிலிருக்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், பேராசிரியர்கள், தேர்வர்களின் உடல் மொழி, விடையளிக்கும் முறை, தகவல் பரிமாற்ற திறன் போன்றவற்றை கவனமுடன் பரிசீலனை செய்கிற உளவியல் நிபுணர்கள் ஆகியோர் இடம் பெற்றனர்.

மாதிரி ஆளுமைத் தேர்வில் தேர்வர்களின் ஆளுமைத் தோற்றம், முன்னெடுக்கும் பண்பு, தலைமைப் பண்பு, தனித் திறன், தன்னம்பிக்கை, அறிவாற்றல், தகவல் பரிமாற்றம், உடல் மொழி, அறநெறி, ஊக்கத்திறன் போன்ற பத்து பண்புகள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, நூறு சதவிகிதத்திற்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது. பின்னர், தேர்வர்களிடம் அவர்கள் செயல்பட்ட விதம் குறித்து எடுத்துக் கூறி, மேலும் எவ்வாறு தங்களை செம்மையாக செதுக்கிக்கொள்ள வேண்டும் என்கிற அறிவுரையும் வழங்கப்பட்டது.

மாதிரி ஆளுமைத் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆளுமைத் தேர்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு தேர்வர்களுக்கும், டெல்லி சென்று வருவதற்குப் போக்குவரத்து செலவினமாக ரூ.5,000 உதவி தொகையாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

போலி வழக்கால் பாலியல் சுகத்தை இழந்தேன்..! 10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடிய இளைஞர்...!

Thu Jan 5 , 2023
மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் கந்து. 35வயதான இந்த இளைஞர் கூட்டாளியுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரில் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு ரத்திலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கந்து […]

You May Like