fbpx

சோகம்..! திருமணமான இரண்டே நாளில்..! கணவர் கண்ணெதிரே நடந்த பயங்கரம்..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நடந்த விபத்தில் புதுமணப் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலே உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ் (35) மற்றும் சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் வேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அதேபோல, திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டியை சேர்ந்த சிவசக்தி நகர் ராமகிருஷ்ணன் (29) என்பவர் அவரது மனைவி ஜீவிதா (21) உடன் திருச்செங்கோட்டில் இருந்து வேலூர் நோக்கி பொலிரோ காரில் சென்றுள்ளார். அப்போது, இரு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கால் துண்டாகி உடல் பாகங்கள் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சோகம்..! திருமணமான இரண்டே நாளில்..! கணவர் கண்ணெதிரே நடந்த பயங்கரம்..!

இதேபோல் பொலிரோ காரில் வந்த புதுமணப்பெண்ணான ராமகிருஷ்ணன் மனைவி ஜீவிதா (21) என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்து போன ஜீவிதாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் கடந்த திங்கட்கிழமை அன்று தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கோயிலுக்கு செல்ல காரில் வந்து கொண்டிருந்தபோது நேர்ந்த இந்த விபத்தில் கணவர் கண்ணெதிரிலேயே ஜீவிதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை.... பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்க வேண்டும்... சீமான்.!

Wed Aug 31 , 2022
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை பற்றிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கூறப்பட்டுள்ளது;-திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகில் கெங்கை சூடாமணியிலுள்ள தனியார் பள்ளியில் நான்கு வயது பெண்குழந்தை ஒன்று அரசுப்பள்ளி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். தாய்வழிச்சமூகமாக விளங்கி பெண்களுக்கு முதன்மைத்துவம் வழங்கி போற்றிக் கொண்டாடிய தமிழ்ச்சமூகத்தில், பெண் பிள்ளைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்ற இன்றைய […]
’முதல்வர் எழுதிய புத்தகத்தை படிக்க ஆர்வம் காட்டும் சீமான்’..! ஏன் தெரியுமா?

You May Like