fbpx

நாடு முழுவதும் சமையல் எண்ணெய்க்கு ஒரே மாதிரியான விலை..! மத்திய அரசு பரபரப்பு தகவல்

ஒரே பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் எண்ணெய்-க்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால், ரஷ்யா – உக்ரைன் போர், இந்தோனேசியா, மலேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை போன்றவற்றால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந்தோனேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து, சர்வதேச அளவில் விலை குறைந்தது. மத்திய அரசு பாமாயில் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் சூரியகாந்தி, சோயாபீன் மற்றும் பாமாயில் ஆகிய எண்ணெய்களின் சில்லறை விலை கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.10 முதல் 15 வரை குறைக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளதால், விலையை மேலும் குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியது.

நாடு முழுவதும் சமையல் எண்ணெய்க்கு ஒரே மாதிரியான விலை..! மத்திய அரசு பரபரப்பு தகவல்

முன்னணி சமையல் எண்ணெய் நிறுவனங்கள், சங்கங்களுடன் ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத்துறை கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில் விலையை குறைப்பது தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய உணவு செயலாளர் சுதன்சு பாண்டே, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 10% குறைந்திருக்கிறது. அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வலியுறுத்தினோம். இதனால், சமையல் எண்ணெய் விலையை ரூ.15 வரை குறைக்க அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல் பெரும் உற்பத்தியாளர்கள், அடுத்த வாரத்துக்குள் பாமாயில், சோயாபீன், சன்பிளவர் ஆயில் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எண்ணெய்களின் விலையை ரூ.15 குறைப்பதாக உறுதியளித்தனர் என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் சமையல் எண்ணெய்க்கு ஒரே மாதிரியான விலை..! மத்திய அரசு பரபரப்பு தகவல்

மேலும், ஒரே பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் எண்ணெய்-க்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Chella

Next Post

இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்..! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Sun Jul 10 , 2022
திருச்சி மற்றும் காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருச்சி – காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. திருச்சி – காரைக்குடி சிறப்பு ரயில் (06887) மற்றும் காரைக்குடி – திருச்சி சிறப்பு ரயில் (06888) ஜூலை […]

You May Like