fbpx

’சசிகலா எங்களுடன் இணைந்து பணியாற்றுவார்’..! ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேட்டி

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சசிகலா எங்களுடன் இணைவார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புவதாக தெரிவித்தார்.

’சசிகலா எங்களுடன் இணைந்து பணியாற்றுவார்’..! ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேட்டி

ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாங்கள் அவருடன் இருக்கிறோம் என்றும் நிச்சயமாக அதிமுக ஒன்றுபடும் என்றும் கோவிந்தராஜ் தெரிவித்தார். மேலும், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவர் எங்களுடன் இணைவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

Chella

Next Post

வேலைக்கு ஆட்கள் தேவை..! தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு..!

Wed Sep 14 , 2022
குவைத், ஓமன் நாடுகளுக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு 30 வயதுக்கு மேற்பட்ட பெண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் மற்றும் உணவு, இருப்பிடம், விமான டிக்கெட் போன்றவை குவைத் நாட்டில் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். இதுகுறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் […]
வேலைக்கு ஆட்கள் தேவை..! தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு..!

You May Like