பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சசிகலா எங்களுடன் இணைவார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புவதாக தெரிவித்தார்.
![’சசிகலா எங்களுடன் இணைந்து பணியாற்றுவார்’..! ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேட்டி](https://1newsnation.com/wp-content/uploads/2021/04/sasikala26-1614839177-1614839305-1614843542.jpg)
ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாங்கள் அவருடன் இருக்கிறோம் என்றும் நிச்சயமாக அதிமுக ஒன்றுபடும் என்றும் கோவிந்தராஜ் தெரிவித்தார். மேலும், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவர் எங்களுடன் இணைவார் என நம்பிக்கை தெரிவித்தார்.