நாட்டில் கிராமப்புறங்களில் இருக்கின்ற, மாணவர்களுக்கு, இணையதள கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று, நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. இது கிராமப்புற மாணவர்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கின்ற கிராமப்புற மாணவர்களை இணையதள கற்றதுக்கு வர வேண்டும் என்று சிரமப்படுகிறார்கள். ஆகவே இவர்களுக்கு என்று பி எம் இ வித்யா உதவித்தொகை திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஒரு முன்மொழிவை கல்வி அமைச்சகம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டு, இருக்கிறது. அத்துடன், இதற்கான செலவுகளை முழுமையாக அரசே ஏற்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற பரிந்துரை செய்திருக்கிறது.
ராஜ்யசபா உறுப்பினர் விவேக் தாகூர் தலைமையிலான, கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நிலை குழு கல்வியின் உள்ளடக்கத்திற்கான 22 டிடிஎச் சேனல்களின் ஸ்ட்ரீமிங்கை சமூக ஊடக தலங்களில் சிறப்பாக சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.