fbpx

#TnGovt: 6 முதல்‌ 8 வரை பயின்று வருபவர்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை மூலம்‌ அரசு மற்றும்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற கல்வி நிறுவனங்களில்‌ கல்வி பயிலும்‌ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை 1 முதல்‌ 5 வரை பயின்று வருபவர்களுக்கு ரூ.1000/-, 6 முதல்‌ 8 வரை பயின்று வருபவர்களுக்கு ரூ. 3000/-, 9 முதல்‌ 12 வரை மற்றும்‌ IIT, Diploma பயின்று வருபவர்களுக்கு ரூ.4000/, இளங்கலை பயின்று வருபவர்களுக்கு ரூ.6000/, முதுகலை, பி.இ, எம்‌.பி.பி.எஸ்‌பயின்று வருபவர்களுக்கு ரூ.7000/- என்ற வகையில்‌ கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அரசு மற்றும்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற கல்வி நிறுவனங்களில்‌ கல்வி பயிலும்‌ மாற்றுத்திறனாளி மாணவ,‌ மாணவியர்கள்‌ விண்ணப்பித்து பயனடையலாம்‌. மேலும்‌ 9-ஆம்‌ வகுப்பு முதல்‌ கல்வி பயில்பவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.250 இலட்சத்திற்கும்‌ குறைவாக உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள்‌ மத்திய அரசின்‌ கல்வி‌ உதவித்தொகை பெற https://scholarships.gov.in/ என்ற இணையதள முகவரியில்‌ விண்ணப்பிக்கலாம்‌.

மேலும்‌ விவரங்களுக்கு சேலம்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ அறை எண்‌ 11-ல்‌ இயங்கி வரும்‌ மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகத்தை தொடர்புகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்‌.

Vignesh

Next Post

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை... எல்லாம் எச்சரிக்கையா இருங்க...! வானிலை மையம் தகவல்...!

Wed Sep 14 , 2022
தமிழகத்தில் வரும் 17-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like