fbpx

#திண்டுக்கல்: விளையாட சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து பலி..!

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நல்லாம்பிள்ளையில் பழனிசாமி என்பவர் தனது மகன் பிரமோத்(14) என்பவருடன் வசித்து வருகிறார். சிறுவன் சிங்காரப்பேட்டையில் இருக்கும் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

நேற்று விடுமுறை என்பதால் பிரமோத் தனது நண்பர்களுடன் அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளான். இதனை தொடர்ந்து தோட்டத்திலுள்ள 80 அடி ஆழ கிணற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் தெரியாத சிறுவன் கிணற்றின் சுவரில் அமர்ந்து கொண்டு குளிக்கும் நண்பர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து பிரமோத் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுபற்றி அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் மோட்டாரினை பயன்படுத்தி கிணற்றிலிருக்கும் தண்ணீரை வெளியேற்றினர்.

அதன்பிறகு 8 மணி நேரத்திற்கு பின்பு சிறுவனின் உடலை மீட்டனர். இதனையடுத்து சிறுவனின் உடல் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம் 4 வயது கைக்குழந்தை முதல் குடும்பத்தைச் சார்ந்த 5 பேரை வெட்டி கொன்ற தந்தையும் தற்கொலை! திருவண்ணாமலையில் பரபரப்பு!

Tue Dec 13 , 2022
தமிழகம் முதன்மை மாநிலமாக இல்லாவிட்டாலும் கடை நிலைக்கு சென்று விடக்கூடாது என்பது தான் தற்போது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.தமிழகத்தில் கொலை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்களுக்கு முதன்மை காரணமாக இருந்து வருவது மது மட்டும்தான். இந்த மது மட்டும் இல்லாவிட்டால் தமிழகத்தில் இது போன்ற குற்ற செயல்களை மிகவும் சுலபமாக தடுத்து விடமுடியும். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், உரவந்தவாடி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் […]

You May Like