fbpx

#Breaking: இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…! மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!

நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் கனமழை காரணமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இதன் காரணமாக இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இதயத்தில் ஓட்டை இருக்கிறதா.. இயற்கை மருத்துவம் இதோ..! 

Wed Dec 14 , 2022
வாழ்நாள் முழுவதும் நமது உடலில் ஓயாமல் உழைக்கும் ஒரு உறுப்பு இதயம்தான். இதன் செயலானது ரத்தத்தை பம்ப் செய்து உடலின் எல்லா உறுப்புகளுக்கும் பிரித்து அனுப்பும் பணியை சிறப்பாக செய்து வருகின்றது. இதயத்திற்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அதனை சரிசெய்ய பை பாஸ் சர்ஜெரி முறை தற்போது நவீன தொழில் நுட்பமாக வந்து விட்டது. இந்த செயலால் பல லட்சம் மக்கள் உயிர் பிழைத்த ஆரோக்கியமாய் இருந்து வருகின்றனர். ஆனால் […]

You May Like