மாண்டஸ் புயல் இன்று இரவு கரையைக் கடக்கவுள்ள நிலையில் 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் இரவு கரையைக் கடக்கவுள்ளது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும் நடக்கவிருந்த சில தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதேபோல், புதுச்சேரி அரசும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உள்ளது..
இன்று பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மயிலாடுதுறை,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, புதுச்சேரி, காரைக்கால்” ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.