fbpx

#Breaking: கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…!

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர் , திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவு வேலூரில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் வழக்கம்போல செயல்படும் என தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல மெரினா, எம்.ஆர்.சி. நகர், அடையாறு, திருவான்மியூர், கோயம்பேடு, நெற்குன்றம், முகப்பேர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

Vignesh

Next Post

திமுகவில் வாரிசு அரசியல்!... கனிமொழிக்கு என்ன நிலை!... வெற்று அறிக்கை வெளியிடுவதா?… முதல்வருக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!

Thu Sep 21 , 2023
திமுக கட்சி, ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரம் வழங்காமல் வெற்று அறி்க்கை வெளியிடுவதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வரலாற்று சிறப்புமிக்க சட்ட மசோதாவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக […]

You May Like