மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் வன்முறை காரணமாக 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹவுராவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்ததை அடுத்து மேற்கு வங்க அரசு வெள்ளிக்கிழமை 144 தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஹவுரா போலீசார் கூறியதாவது; சம்பவம் தொடர்பாக இதுவரை நேற்று 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை, ராம நவமி வன்முறை தொடர்பாக 36 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் 15 பேர் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹவுராவின் காசிபராவில் வெள்ளிக்கிழமை புதிய கல்வீச்சு சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் சிவி ஆனந்த போஸ் ஆகியோர் நிலைமையை ஆய்வு செய்து, தடை உத்தரவுகளை விதிக்கவும், காவல்துறையினரின் பணியை அதிகரிக்கவும் முடிவு செய்தனர்.