fbpx

முடிந்தது செந்தில் பாலாஜியின் பைபாஸ் அறுவை சிகிச்சை…..! சிகிச்சைக்கு பிறகு அவரின் நிலை என்ன…..? மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை……!

சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவருக்கு செய்த மருத்துவ பரிசோதனையில் இதயத்தின் முக்கியமான மூன்று ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இதற்கு நடுவே ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, காவேரி மருத்துவமனைகள் அறுவை சிகிச்சை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது ஆகவே பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்னர் இன்று காலை 5 15 மணி அளவில் மருத்துவர் ரகுராமன் தலைமையிலான குழு செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடத்தியது.

இந்த நிலையில் தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவருக்கு நான்கு பகுதிகளில் அடைப்பு சரி செய்யப்பட்டு இருப்பதாகவும் காவிரி மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு செந்தில் பாலாஜி டிவியில் சிகிச்சை பிரிவில் பால் துறை மருத்துவர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

அமைச்சர் செந்தில்பாலாஜி பைபாஸ் அறுவை சிகிச்சை…..! 5மணி நேரத்துக்குப்பிறகு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்….!

Wed Jun 21 , 2023
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலியின் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அவருக்கு செய்த பரிசோதனையில் இதயத்தில் முக்கிய 3 ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மறுத்தவர்கள் பரிந்துரை செய்தனர். இதற்கு நடுவே சென்னை காவிரி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி […]
’பதவி வந்தவுடன் இந்த வேலையை மட்டும் செய்யக்கூடாது’..!! யாரை தாக்கிப் பேசுகிறார் செந்தில் பாலாஜி..?

You May Like