fbpx

தீவிரமாக பரவும் காய்ச்சல்.. நாளை முதல் 26-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை..

புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் வரும் 26-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

சமீபகாலமாக நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.. தற்போது இந்தியாவில், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 5 நோயாளிகளில் ஒருவர் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மக்கள் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் என்றும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினாலே இந்த வைரஸில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..

அந்த வகையில் புதுச்சேரியில் சமீபகாலமாக இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.. இந்நிலையில் புதுச்சேரியில் பரவும் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை முதல் வரும் 26-ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்..

Maha

Next Post

திருச்சி சிவா வீட்டை அடித்து நொறுக்கிய அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள்…..! திருச்சியில் பரபரப்பு….!

Wed Mar 15 , 2023
திருச்சி எஸ்பிஐ காலனியில் இன்று புதிய டென்னிஸ் அரங்கத்தை திறந்து வைப்பதற்காக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு வருகை புரிந்து இருந்தார். அப்போது டென்னிஸ் அரங்க திறப்பு விழாவிற்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று தெரிவித்து அவருடைய ஆதரவாளர்கள் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்து அமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி இருக்கிறார்கள். இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட அமைச்சர் கே […]

You May Like