முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 97.
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 97. இவர் தனது நீண்ட கால பொது வாழ்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். காங்கிரஸில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தனது கட்சிக்காரர் ராஜ் நரேன் சார்பாக அவர் வழக்கு தொடர்ந்தவர். இறுதியில் எமர்ஜென்சியை விதிக்க வழிவகுத்த வழக்கில் அவர் வெற்றியும் பெற்றார்.
1977 இல், ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், இந்திரா காந்தியின் காலத்தில் செய்யப்பட்ட தொடர்ச்சியான அரசியலமைப்புத் திருத்தங்களை ரத்து செய்தபோது பூஷன் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். 44 வது அரசியலமைப்பு திருத்தம், அரசியலமைப்பை அவசரநிலைக்கு முன்பு இருந்த நிலைக்கு மீட்டெடுப்பதற்கான” அரசியல் வாக்குறுதியாக இருந்தது, இது அவரது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.