fbpx

அதிர்ச்சி..!! பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல்..!! நடந்தது என்ன..?

பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்து பாராட்டு பெற்ற எஸ்ஐ கலைச்செல்வி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரோகித் என்ற ரவுடியை, டி.பி.சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்வி துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். இதையடுத்து, அவருக்கு சென்னை காவல் ஆணையர் அருண் வெகுமதி அளித்து பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை டிபி சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், குடிபோதையில் அவரது 6 வயது குழந்தையை அடித்து துன்புறுத்துவதாகவும், அரை நிர்வாணமாக நின்று கொண்டு அப்பகுதியில் செல்லும் நபர்களிடம் தகராறு செய்து அவர்களை தாக்க முயல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், எஸ்ஐ கலைச்செல்வி சம்பவ இடத்திற்குச் சென்று நேபாள நாட்டுப் பெண்ணை இழுத்து அவர் மீது துணி போர்த்தி சமாதானம் செய்ய முயன்றார். அப்போது, போதையில் இருந்த அப்பெண், எஸ்ஐ கலைச்செல்வி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் கலைச்செல்வி முகத்தில் நகக் கீறல்கள் வீக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு சக காவலர்கள் கலைச்செல்வியை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எஸ்ஐ கலைச்செல்வி, இது குறித்து டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில், மது போதையில் ரகளை செய்து எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திய நேபாளத்தைச் சேர்ந்த சீதா என்ற பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : தமிழ்நாட்டிற்கு நாளை ரெட் அலர்ட்..!! இந்த 3 மாவட்ட மக்களும் பாதுகாப்பா இருங்க..!! வானிலை மையம் வார்னிங்..!!

English Summary

The attack on SI Kalachelvi, who was praised for shooting a famous rowdy, has caused a great shock.

Chella

Next Post

விஜய் கட்சியில் இணையும் EX அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Fri Aug 16 , 2024
It has been reported that Vijay has agreed to include 12 former ministers, MLAs and MPs in Thaveka.

You May Like