fbpx

அதிர்ச்சி வீடியோ!… நடக்கவிடாமல் செய்யும் மர்ம நோய்!… கென்யாவில் 100 மாணவிகள் பாதிப்பு!

கென்யாவில் மர்மநோய் பாதிப்பு காரணமாக நடக்கமுடியாமல் பள்ளி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் காகாமெகா (Kakamega) எனும் நகரில் அமைந்துள்ள எரேகி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள், “மர்ம” நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இதனால் நடக்கும்போது சிரமம் மற்றும் முழங்கால் வலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் தாங்கி தாங்கி நடக்கும் வீடியொ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சிறுநீர் மாதிரிகளை சேகரித்து கென்யாவின் மருத்துவ ஆய்வுக் கழகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பள்ளி காலவரம்பின்றி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கென்யா டூம்ஸ்டே கல்ட்டில் மர்ம நோயால் இறப்பு எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 600 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு இலவசம்!… திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Fri Oct 6 , 2023
1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர், தெற்கு மாட வீதியில் திருமலை நம்பி சந்நிதியை அடுத்து சுபதம் நுழைவாயில் வழியாக இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மிகவும் புகழ்பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு, அக்டோபர் மாதம் 7, […]

You May Like