fbpx

சிங்கப்பூர் ஓபன் மகளிர் பேட்மிண்டன்..! இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முன்னேற்றம்..!

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் சிறப்பாக விளையாடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில், இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய், கஷ்யப், சமீர் வெர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பெல்ஜியத்தின் வீராங்கனையான லியானே டானை எதிர்த்து விளையாடினார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து வெற்றி

உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து தரவரிசையில் மிகவும் பின் தங்கியுள்ள லியானே டானை எளிதாக எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-15 என்ற 21-11 என்ற இரண்டு செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Chella

Next Post

மீண்டும் 17 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை....! மொத்தம் 45 பேர் பலி.‌.

Wed Jul 13 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,906 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 45 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,447 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
மக்களே..!! கொரோனா அறிகுறி இருந்தால் இனி என்ன நடக்கும் தெரியுமா..? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

You May Like