fbpx

மதுரை விமான நிலையத்தில்….! 1 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…..!

மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த தனியார் விமானம் ஒன்றில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, நேற்று முன்தினம் துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த நசீம் என்ற பயணியின் உடைமைகளை பரிசோதித்து பார்த்தனர்.

அந்த சோதனையில் அந்த பயணியின் பையில் இருந்து பசை வடிவிலான தங்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. மேலும் அவற்றின் மொத்த எடை 1 கிலோ 565 கிராம் என்றும், இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, வான் நுண்ணறிவு பிரிவினர் கடத்தி வந்த தங்கத்தை பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

ஓய்வு பெற்ற கல்வித் துறை அதிகாரி……! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பே உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி…..!

Tue May 23 , 2023
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திங்கள்கிழமை என்பதால் பொதுமக்கள் குறைவு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் ஏராளமான ஒரு மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். மனுவை கொடுக்க வருகை தரும் பொதுமக்கள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் உடமைகள் அனைத்தும் நுழைவாயில் அருகே காவல் துறையினரால் சோதனை செய்யப்பட்ட பிறகு தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த […]

You May Like