fbpx

அதிர்ச்சி தரும் செய்தி.‌‌.! பிரபல நிறுவனம் 4% ஊழியர்களை மொத்தமாக பணி நீக்கம் செய்து உத்தரவு…!

ஸ்பிரிங்க்ளர் நிறுவனம் 4% ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான ஸ்பிரிங்க்ளர் அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 4 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனம் கடந்த வாரம் பணிநீக்க வேலைகளை தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் அதன் பணியாளர்களைக் குறைத்து வருகிறது.

இந்த முடிவுகளை எடுப்பது மிகவும் கடினமானது என்றாலும், வணிக மாற்றத்திற்கு ஏற்ப வகையில், இது எங்கள் நீண்ட கால வெற்றிக்கான சரியான முடிவு” என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மேற்கோள் காட்டினார். ஊழியர்களை மிகுந்த அக்கறையுடனும் மரியாதையுடனும் ஆதரிப்பதும், ஸ்பிரிங்க்ளருக்கு அவர்கள் செய்த பங்களிப்புகளுக்குப் பாராட்டு தெரிவிப்பதும், அவர்களின் மாற்றத்தில் அவர்களுக்கு உதவுவதும் எங்களது முதல் முன்னுரிமையாகும் என்றார்.

விற்பனையை எளிதாக்குவதற்கும், வணிகத்திற்கு லாபகரமான வளர்ச்சியை வழங்குவதற்கும் நாங்கள் கவனம் செலுத்துவோம், ”என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

Vignesh

Next Post

பத்தாம் வகுப்பு முதல்... ₹ 1,12,400 ரூபாய் சம்பளம் வரை எல்லையோர காவல் படையில் 127 வேலை வாய்ப்புகள்!

Thu Feb 16 , 2023
மத்திய அரசு எல்லை காவல் படையில் 127 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதன்படி தலைமை காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணிகளுக்காக 127 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எல்லையோர காவல் படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் மாதம் 13ஆம் தேதிக்குள் எல்லை ஒரு […]

You May Like