fbpx

ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு..! கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு..!

ரேஷன் கடை பணியாளர்கள் சிறப்பு ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வ கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க குழு அமைத்து ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு ஆணையத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரான பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நியாயவிலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளான, நியாய விலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு முரண்பாடுகள் ஏதும் இல்லாத தீர்வுகளை பரிசளித்து, அது தொடர்பான பரிந்துரையினை ஜூலை 31ஆம் தேதிக்குள் பதிவாளருக்கு அனுப்ப கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருந்தது.

Tamilnadu Ration Shop Recruitment 2021 | 10th Pass to Any Degree | 3000  Vacancies | Important

இந்நிலையில், நியாயவிலைக் கடை பணியாளர்கள் சிறப்பு ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வ கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த எழுத்துப்பூர்வ கோரிக்கையை ஜூலை 14ஆம் தேதிக்குள் கூட்டுறவுத்துறை அமைத்த குழுவிடம் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

முருகன் கோவிலில் நித்தியானந்தாவுக்கு சிலை..! கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்..! அதிர்ச்சியில் மக்கள்

Tue Jul 12 , 2022
நித்யானந்தா சீடர் ஒருவர் முருகன் கோயிலை கட்டி, அங்கு 18 அடியில் நித்யானந்தா சிலையை நிறுவி, கும்பாபிஷேகம் செய்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பெரம்பை கிராமத்தில், பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோயில்போல இங்கு ஒரு முருகன் கோயிலை கட்டிவந்தார். 27 அடி உயரத்தில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அந்தக் கோயிலுக்கு “பத்துமலை முருகன் கோயில்” என […]
முருகன் கோவிலில் நித்தியானந்தாவுக்கு சிலை..! கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்..! அதிர்ச்சியில் மக்கள்

You May Like