fbpx

மதுராந்தகம் | பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை பயன்படுத்தி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்…..! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை…..!

சித்தாமூர் காவல் நிலையத்தில் தனி பிரிவின் சிறப்பு உதவி ஆய்வாளராக பக்தவச்சலம் என்பவர் பணியாற்றி இருந்தார். இவர் கடந்த பல வருடங்களாக இது பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2018 ஆம் வருடம் ஜமீன் என்ற ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவபாலன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது முதுகரை பகுதியில் விபத்துக்கு உள்ளானதாகவும், இதில் எதிரே வந்த நபர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இத்தகைய நிலையில், இந்த விபத்து குறித்து சித்தாமூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிவபாலனிடம் விசாரணை நடத்தினர். அதோடு காவல் நிலைய தினையில் விடுவிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது ஆகவே விபத்தில் சிக்கிய வாகனத்தை பக்தவச்சலம் வேறு வாகனத்தின் பதிவெண் பொருத்தி கடந்த 4 வருடங்களாக பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் கள்ளத்தராய உயிரிழப்பு சம்பவம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கண்ட காவல் நிலையம் உட்பட கிராம பகுதிகளில் விசாரணை நடத்தினர். அதோடு சிவபாலனும் தன்னுடைய வாகனத்தை அடையாளம் கண்டதால் புகார் வழங்கலாம் என்ற அச்சம் காரணமாக, பக்தவச்சலம் வாகனத்தை காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு சிவபாலனிடம் வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். அதோடு மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் பக்தவச்சலத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் பிரணீத் பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்

Next Post

சென்னை | வேலைத்தேடி அலைந்த பெண்ணை கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற இளைஞர்கள்…..! காவல்துறையில் சிக்கியது எப்படி…..?

Fri Jun 2 , 2023
சென்னை கொரட்டூர் பகுதியில் சேர்ந்த 23 வயது இளம்பெண் வேலை தேடி பல பகுதிகளில் அலைந்து திரிந்து இருக்கிறார். பெரியபாளையம் பகுதியில் இவர் பலரை சந்தித்து வேலை கேட்டு இருக்கின்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மௌலி, கார்த்திக் என்ற 2 இளைஞர்களும் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது வேலை தேடி அலைவதாக தெரிவித்துள்ளார் அந்த இளம் பெண். பின்பு வீட்டு வேலை செய்வதற்கு பெண் தேவைப்படுகிறது என அந்த இளைஞர்கள் […]

You May Like