இன்று பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் ஆகியவற்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது.
இந்நிலையில், ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று (பிப்ரவரி 23) முதல் பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் இந்த முகாம்களில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary : TN govt students can enrol for Aadhaar at schools from today
Read More : ‘இந்த நன்றி கெட்டவர்களுக்கா உணவளிக்கிறீர்கள்’..? ’இனியும் வேண்டாம்’..!! Modi அரசை தாக்கிய நடிகர் கிஷோர்..!!