fbpx

TnGovt: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…! விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்…!

சிறுபான்மையினர்‌ இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்‌, கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மத்திய / மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின்‌ https://scholarships.gov.in/ என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் NPS ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்‌ நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியான மாணவ, மாணவிகள்‌ பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு நாளை மாலை வரையிலும்‌ மேற்படி இணைய தளத்தின்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌. இத்திட்டம்‌ தொடர்பான கூடுதல்‌ விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ வளாகத்தில்‌ அமைந்துள்ள மாவட்ட பிற்படு த்தப்பட்‌ டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

’உங்களின் நிம்மதியான தூக்கத்தை கெடுப்பது இந்த உணவுகள்தான்’..!! ’இதை இரவில் தவிர்த்திடுங்கள்’..!!

Fri Oct 14 , 2022
உலகம் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கும் போது செல்போன், சுவர்கள், கடிகாரங்களைப் பார்ப்பது மற்றும் வீட்டின் சிறிய விவரங்களைப் பார்ப்பது பலரை ஆட்டிப்படைக்கும் வலி. தூக்கமின்மை உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ள பிரச்சனையாகும். தூக்கமின்மை பல ஆபத்தான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. தூக்கமின்மைக்கு பல வெளிப்புற சூழல்கள் காரணமாக இருந்தாலும், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது பொதுவாக தூக்கமின்மை எனப்படும் இந்த தூக்கக் கோளாறைத் தூண்டும் என்பது […]

You May Like